Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கணம் பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்

1. சந்திப்பிழை திருத்தி எழுதுதல்
2. மரபுப்பிழை நீக்கி எழுதுதல்
3. வழூஉச் சொல் நீக்கி எழுதுதல்
4. வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்
5. ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்

மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் அமையும். இவற்றை ஒருமுறை ஆழ்ந்து படித்தால் மனதில் நின்றுவிடும்.ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு வினா என் ஐந்து வினாக்கள் கேட்கப்படலாம்.

1.சந்திப்பிழை நீக்கி எழுதுதல்

எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால், எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம்.

வல்லினம் மிகும் இடங்கள்

1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
(எ.கா)அந்தத் தோட்டம்
இந்தக் கிணறு
எந்தத் தொழில்
அப்படிச் செய்தான்
இப்படிக் கூறினான்
எப்படிப் பார்ப்போம்

2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும். (எ.கா)பொருளைத் தேடினான்
புத்தகத்தைப் படித்தான்
ஊருக்குச் சென்றான்
தோழனுக்குக் கொடு
3. ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின் வல்லினம் ஆகும்.
(எ.கா)படிப்பதாகச் சொன்னார்
போய்ச் சேர்ந்தான்
--------------------------------------------------------------------------------------------------------------
4. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வல்லினம் ஆகும்.
(எ.கா)சாலப் பேசினான்
தவச் சிறிது
5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.
(எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி

6. ஒரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின்பகும்.
(எ.கா)தைப்பாவை
தீச்சுடர்

7. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.
(எ.கா)ஓடாப்புலி, வளையாச் சொல்
----------------------------------------------------------------------------------------------------------
8. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
(எ.கா)பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
------------------------------------------------------------------------------------------------------------
9. முற்றியலுகர சொற்களின் பின் வல்லினம் மிகும்
(எ.கா)திருக்குறள், பொதுச்சொத்து
-----------------------------------------------------------------------------------------------------------
10. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
(எ.கா)மழைக்காலம், பனித்துளி

வல்லினம் மிகா இடங்கள்


1. வினைத்தொகையில் வில்லினம் மிகாது
(எ.கா)விரிசுடர், பாய்புலி
2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
(எ.கா)காய்கனி, தாய்தந்தை
3. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது
(எ.கா)தமிழ் கற்றார், கதை சொன்னார்.
4. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது
(எ.கா)கற்க கசடற, வாழ்க தமிழ்
5. விளித்தொடரில் வலி மிகாது
(எ.கா)கண்ணா பாடு, அண்ணா பாடு
6. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களுக்குப்பின் வலி மிகாது...
(எ.கா)அத்தனை பழங்கள், இத்தனை பழங்கள், எத்தனை கால்கள்
7. இரட்டைக் கிளவியிலும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது.
(எ.கா)கலகல, பாம்பு பாம்பு
8. அவை இவை எனும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
(எ.கா)அவை சென்றன, இவை செய்தன
9. அது இது எனும் எட்டுச் சொற்களின் பின் வலி மிகாது
(எ.கா)அது பிறந்தது, இது கடித்தது
10. எது, அது எனும் வினைச்சொற்களின் பின் வலி மிகாது
(எ.கா)எது பறந்தது, யாது தந்தார்
உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன?
ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அவற்றை விளக்கும் பயனும் மறைந்து வருவது உடனும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

(எ.கா)
நீர்க்குடம்

அதாவது நீரை உடைய குடம்.இதில் 'ஐ' என்னும் 2 ம் வே.உருபும் 'உடைய' என அதை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

நீர்க்குடம்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மட்பானை-மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
கூலிவேலை-நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தொட்டித் தண்ணீர்-ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
வீட்டுப்பூனை-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

ஆறாம் வேற்றுமைத் தொகையில் பயன் தரும் சொல் மறைந்து வருவதில்லை.

2.மரபுப் பிழையை நீக்குதல்

பறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்

பறவைகள்விலங்குகள்
ஆந்தை - அலறும்நாய் - குரைக்கும்
கோழி - கொக்கரிக்கும்நரி - ஊளையிடும்
குயில் - கூவும்குதிரை- கனைக்கும்
காகம் - கரையும்கழுதை - கத்தும்
கிளி - கொஞ்சும்பன்றி - உறுமும்
மயில் - அகவும்சிங்கம் - முழங்கும்
கோட்டான் - குழலும்பசு - கதறும்
வாத்து - கத்தும்எருது - எக்காளமிடும்
வானம்பாடி - பாடும்எலி - கீச்சிடும்
குருவி - கீச்சிடும்தவளை - கத்தும்
வண்டு - முரலும்குரங்கு - அலம்பும்
சேவல் - கூவும்பாம்பு - சீறிடும்
கூகை - குழலும்யானை - பிளிரும்
புறா - குனுகும்பல்லி - சொல்லும்
------------------------------------------------------------------------------------------------------------
பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம் புலிப்பரள்
சிங்கக்குருளை
பூனைக்குட்டி
எலிக்குஞ்சு
நாளிணிக்குட்டி
கோழிக்குஞ்சு
குதிரைக்குட்டி
கீரப்பிள்ளை
கழுதைக்குட்டி
மான்கன்று
ஆட்டுக்குட்டி
யானைக்கன்று
பன்றிக்குட்டி
-------------------------------------------------------------------------------------------
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள் சோளத்தட்டு
முருங்கைக்கீரை
தாழைமடல்
தென்னங்கீற்று
வாழையிலை
பனையோலை
வேப்பந்தழை
மாவிலை
மூங்கில் இலை
நெல்தாள்
செடி, கொடி மரங்களின் தொகுப்பு பூந்தோட்டம்
மாந்தோப்பு
வாழைத்தோட்டம்
தேயிலைத் தோட்டம்
சோளக்கொல்லை
சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு
பனங்காடு
வேலங்காடு
------------------------------------------------------------------------------------------------

பொருட்களின் தொகுப்பு பெயர்கள்

ஆடு - மந்தை
மாடு - மந்தை
எறும்பு - சாரை
கல் - குவியல்
சாவி - கொத்து
திராட்சை - குலை
பசு - நிரை
யானை - கூட்டம்
வீரர் - படை
வைக்கோல்- போர்
விறகு - கட்டு
மக்கள் - தொகுப்பு


3.வழூஉச் சொற்களும் தமிழ்ச்சொற்களும்

வழுஉச்சொல்தமிழ்சொல்
உசிர்உயிர்
ஊரளிஊருளி
ஒருத்தன்ஒருவன்
கடகால்கடைக்கால்
குடக்கூலிகுடிக்கூலி
முயற்சித்தார்முயன்றார்
வண்ணத்திப்பூச்சிவண்ணத்துப்பூச்சி
வென்னீர்வெந்நீர்
எண்ணைஎணணெய்
சிகப்புசிவப்பு
தாவாரம்தாழ்வாரம்
புண்ணாக்குபிண்ணாக்கு
கோர்வைகோவை
வலது பக்கம்வலப்பக்கம்
பேரன்பெயரன்
பேத்திபெயர்த்தி
தலகாணிதலையணை
வேர்வைவியர்வை
சீயக்காய்சிகைக்காய்
சுவற்றில்சுவரில்
இருபல்இருமல்
அருவாமனைஅரிவாள்மனை
அண்ணாக்கவுருஅரைநாண்கயிறு
புஞ்சைபுன்செய்
புண்ணாக்குபிண்ணாக்கு
நாத்தம்நாற்றம்
பதனிபதிநீர்
அருகாமைஅருகில்
வெங்கலம் வெண்கலம்
பேட்டிநேர்காணல்
வெண்ணைவெண்ணெய்
ஒத்தடம்ஒற்றடம்
தேனீர்தேநீர்
கவுறுகயிறு
பயிறுபயறு
பாவக்காய்பாகற்காய்
ரொம்பநிரம்ப
கோடாலிகோடாரி
கடப்பாறைகடப்பாரை
ஆம்பளைஆண்பிள்ளை
ஈர்கோலிஈர்கொல்லி
அவரக்காஅவரைக்காய்
---------------------------------------------------------------------------------------------------------------

4.வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்

வேற்றுமொழிச்சொல்தமிழ்ச்சொல்
பஜனைகூட்டுவழிபாடு
வைத்தியர்மருத்துவர்
ஜனம்மக்கள்
கர்வம்செருக்கு
வாபாஸ்திரும்பபெறுதல்
தபால்அஞ்சல்
கிஸ்திவரி
அலமாரிநெடும்பேழை
முண்டாசுதலைப்பாகை
சிம்மாசனம்அரியணை
அகங்காரம்ஆணவம்
பஜார்கடைத்தெரு
சாதம்சோறு
சபைஅவை
நாஷ்டாசிற்றுண்டி
ஆசீர்வாதம்வாழ்த்து
நமஸ்காரம்வணக்கம்
லாபம்ஈவு
இஷ்டம்விருப்பம்
வக்கீல்வழக்குரைஞர்
தராசுதுலாக்கோல்
ஹாஸ்டல்விடுதி
சர்க்கார்அரசு
கேப்பைகேழ்வரகு
ஐதீகம்சடங்கு
வேதம்மறை
ஜானவாசம்மாப்பிளை அழைப்பு
அபிஷேகம்திருமுழுக்கு
யாத்திரைபுனிதப் பயணம்
ஆயுள்வாழ்நாள்
தீர்த்தம்புனித நீர்
ஜனநாயகம்குடியாட்சி
நதிஆறு
சந்தாகட்டணம்
பிரதிநிதிசார்பாளர்
பத்திரம்ஆவணம்
மத்தியாணம்நண்பகல்
சிபாரிசுபரிந்துரை
பரீட்சைதேர்வு
பிரார்த்தனைதொழுகை
சென்ட்ரல் கவர்ன்மெண்ட்நடுவண் அரசு
தாலுகா ஆபிஸ்வட்டாட்சியர் அலுவலகம்

5. ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்

இது ஒரு எளிய வகை வினா, தேர்வரின் தமிழறிவை சோதிக்கும் வண்ணம் , வாக்கியங்களில் வரும் ஒருமை/பன்மை (singular/flural) வேறுபாடுகளை கண்டறியும் திறனை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.

உதாரணம் : ஒருமை/பன்மை பிழைகளைக் கண்டறிக ?
அ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர்
ஆ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றார்கள்
இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது
ஈ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றன.

விடை : இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது( தமிழ்நாடு என்ற பெயர் ஒருமையில் வந்ததால் வென்றது என்பது ருமையிலேயே வர வேண்டும்.)

ஒருமை - பன்மை பிழைகளை நீக்குதல்

வினா: குயில் மயில் ஒன்றாய் இருந்தன .
விடை: குயிலும் மயிலும் ஒன்றாய் இருந்தன
வினா: தோட்டத்தில் மாடுகள் மேய்கிறது .
விடை: தோட்டத்தில் மாடுகள் மேய்கின்றன
வினா: அன்று பார்த்தப் பெண் அவள் அல்ல .
விடை: அன்று பார்த்தப் பெண் அவள் அல்லள்
வினா: தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன .
விடை: தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது
வினா: ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றது .
விடை: ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றன
வினா: மரத்தில் பழங்கள் பழுத்தன .
விடை: மரங்களில் பழங்கள் பழுத்தன
வினா: சில வீரர்கள் கீழே விழுந்தனர் .
விடை: வீரர்கள் சிலர் கீழே விழுந்தனர்
வினா: பள்ளியில் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள் .
விடை: பள்ளியில் குழந்தைகள் பாடங்களைப் படிக்கிறார்கள்
வினா: குதிரை வேகமாக ஓடின
விடை: குதிரைகள் வேகமாக ஓடின
வினா: முருகன் கவிதை எழுதுகிறார்
விடை: முருகன் கவிதை எழுதுகிறான்
வினா: அணை உடைகின்றன
விடை: அணைகள் உடைந்தன
வினா: மான்கள் காட்டில் மேய்ந்தது
விடை: மான்கள் காட்டில் மேய்ந்தன
வினா: புலிகள் வந்தது, எருதுகள் ஓடியது
விடை: புலி வந்தது, எருதுகள் ஓடின
வினா: தமிழர் திரைகடல் ஓடி திரவியம் தேடினார்
விடை: தமிழர் திரைகடல் ஓடி திரவியம் தேடினர்.
வினா: கோயிலில் திருமுழுக்கும் கூட்டு வழிபாடும் நடந்தது
விடை: கோயிலில் திருமுழுக்கும் கூட்டு வழிபாடும் நடந்தன.

Share with Friends