Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2013

10169.பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
உலக நிலைகளை அறியாதிருத்தல்
கீரியும் பாம்பும் போல
இலவு காத்த கிளி போல
கிணற்றுத் தவளை போல
அனலிடைப்பட்ட புழு போல
10170.இலக்கணக் குறிப்பறிதல்
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
நெடுந்தேர்
மலர்ச்சேவடி
செங்கோல்
கருங்குரங்கு
10171.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :
‘கரியன் - என்ற பெயர்சொல்லின் வகை அறிக.
சினைப் பெயர்
பொருட்பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
10172."நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள நடலைக்கு இணையான ஆங்கிலச்சொல்லை எழுதுக
Affection
Affliction
Attraction
Addition
10173.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :
ஆதிரையான் என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
காலப் பெயர்
குணப் பெயர்
10174."இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
லுடையுழி என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
An assistant
Supporter
Staff
Friends
10175.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
இலக்கியா புத்தாடை அணிவித்தாள்
இலக்கியா புத்தாடை அணிந்தாள்
புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது
இலக்கியா புத்தாடை அணியாள்
10176.திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை
நானூற்று முப்பது
இருநூற்று ஒன்று
முந்நூற்று ஆறு
நானூற்று எழுபது
10177.தழீஇ-இலக்கணக் குறிப்பு தருக,
செய்யுளிசை அளபெடை
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இன்னிசையளபெடை
சொல்லிசை அளபெடை
10178.உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
உலகு
உலவு
உளது
உளம்
10179.ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
அவன் கவிஞன் அல்லர்
அவன் கவிஞன் அன்று
அவன் கவிஞன் அல்லன்
அவன் அல்லன் கவிஞன்
10180.ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை --------------
துளசி
கீழாநெல்லி
தூதுவளை
கற்றாழை
10181.இலக்கணக் குறிப்பறிதல் :
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க
வினைத்தொகை
செந்நாய்
சூழ்கழல்
வெண்மதி
கண்ணோட்டம்
10182.கோடிட்ட இடத்தை நிரப்புக:
தில்லையாடி வள்ளியம்மை ------------- நாட்டில் பிறந்தார்.
அமெரிக்கா
இத்தாலி
இந்தியா
தென்னாப்பிரிக்கா
10183.பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
அசதிக் கோவை
ஆசாரக் கோவை
திருக்கோவையார்
மும்மணிக்கோவை
10184.பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.
வெண்பா
விருத்தப்பா
கலி விருத்தம்
கலித்தாழிசை
10185.பட்டியல் I ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) களவழிநாற்பது 1. நிலையாமை
(b) முதுமொழிக் காஞ்சி 2. வேளாண் வேதம்
(c) நாலடியார் 3. ஆறு மருந்து
(d) ஏலாதி 4. புறப்பொருள்
3 1 2 4
2 3 4 1
1 3 4 2
4 1 2 3
10186.பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள்-இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
பிறவினை
தன்வினை
கலவை
செய்யப்பாட்டு வினை
10187.பொருந்தாத தொடரைக் கண்டறிக
ஒறுத்தார்-பொறுத்தார்
அஞ்சாமை - துஞ்சாமை
அறிவுடையார்- அறிவிலார்
வையார் - வைப்பர்
10188.வினாவிற்குரிய விடை எழுதுக:
காமராசரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?
கல்விப் பணி ஆற்றிய நாள்
கல்வி வளர்ச்சி நாள்
தொழில் முன்னேற்ற நாள்
தேசிய கல்வி நாள்
Share with Friends