Easy Tutorial
For Competitive Exams

Science QA இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Prepare QA

55703.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணர்த்தி, இறைத்தன்மை பெறுவதை இந்தியப்பண்பாடு வலியுறுத்துகிறது.
2.இந்தியாவின் அனைத்து சமயங்களும் தருமம், தருமநெறி, மறுபிறவி அவதாரக் கோட்பாடு போன்றவற்றைப் புறக்கணிக்காமல் போற்றுகின்றன.
3. “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே “என்று தாயுமானவர் கூறுவது, பகுத்தறிவின் உயர்சிந்தனையாகும்.
1 மட்டும் தவறு
2 மட்டும் தவறு
3 மட்டும் தவறு
அனைத்தும் சரி
55704.இந்திய நாட்டிற்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கும் இன்றியமையாத பண்பாட்டுச் சிறப்புக்கூறுகளில் சேராதது எது?
ஆன்மிக அடிப்படை
மனிதநேயம்
சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும்
வர்ணாசிரம முறை
55705.கூற்று: பண்பாடு என்பது நெகிழ்வுத்தன்மை அற்றதாய் விளங்குகிறது. காரணம்: கால மாற்றத்திற்கு ஏற்பப் புதிதாக உருவாக்கிக் கொள்ளப்படும் வாழ்வியல்
பண்புகளை, பண்பாடு புறக்கணிக்கிறது.
கூற்றும் காரணமும் சரி, காரணம் சரியான விளக்கம்
கூற்றும் காரணமும் சரி, காரணம் சரியான விளக்கமல்ல
கூற்று சரி, காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறு
55706.இந்திய பண்பாட்டின் ஆணிவேராக விளங்குவது எது?
ஆன்மிக அடிப்படை
மனிதநேயம்
சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும்
மதச்சார்பின்மை
55707.நாகரிகம் என்பது ?
அகத் தேவைகளின் வளர்ச்சி
புறத் தேவைகளின் வளர்ச்சி
A & B
ஏதுமில்லை
55708.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. நாகரிகம் எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் முழுமையாகத் தன்னை மாற்றிக்கொள்ளும்.
2. பண்பாடு மாற்றத்திற்கு உட்பட்டாலும் தன் அடையாளத்தை விட்டுச்செல்லும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
55709.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. நாகரிக மாற்றங்கள், வளர்ச்சிகள் உலகில் எந்த நாட்டில் எந்த இடத்தில் எற்பட்டாலும் அவற்றை எவ்வித கடினமும் இல்லாமல் எளிதாக எல்லோரும் அறிந்து பின்பற்றலாம்.
2. பண்பாடு என்பது மிகுந்த முயற்சியின் அடிப்படையில் மனம் ஒன்றியவர்கள்,
ஒருமித்தக் கருத்துடையவர்கள் மட்டுமே பின்பற்றக்கூடியது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
55710.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. நாகரிகம் ஒரு முறையான மற்றும் சீரான வளர்ச்சியைக் கொண்டது.
2. பண்பாட்டு வளர்ச்சி வேகமானது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
55711. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது யாருடைய கூற்று?
அப்பர்
மாணிக்கவாசகர்
அறிஞர் அண்ணா
திருமூலர்
55712.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. புற வளர்ச்சி எனக் குறிப்பிடப்படும் நாகரிகம், மாறும் தன்மையுடையது.
2. அக வளர்ச்சியாகிய பண்பாடு என்றும் மாறாதது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
Explanation:

தலைமுறை தலைமுறையாக ஒரு சமுதாயத்தினரிடமிருந்து அடுத்த சமுதாயத்துக்குக் கொண்டு செல்லப்படுவது, பண்பாடேயாகும்.
55713.கூற்று: இன்றையப் பண்பாட்டுப் பரவல்களின் தன்மையும் அளவும் முந்தைய காலங்களைவிட மிகவேகமாக வளர்ந்துவிட்டன காரணம்: தகவல் தொடர்பு, இணையம், மக்கள் ஊடகங்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றால் பண்பாடு வளர்ச்சி பெற்றுள்ளது.
கூற்றும் காரணமும் சரி, காரணம் சரியான விளக்கம்
கூற்றும் காரணமும் சரி, காரணம் சரியான விளக்கமல்ல
கூற்று சரி, காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறு
Share with Friends