Easy Tutorial
For Competitive Exams

Science QA போக்குவரத்து - தகவல் தொடர்பு (Transport - Communication) போக்குவரத்து அமைப்பு (Transport)

போக்குவரத்து - தகவல் தொடர்பு (Transport - Communication)

இந்தியப் போக்குவரத்து அமைப்பு (Transport):

* ஒரு நாட்டின் வளர்ச்சி பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை மட்டுமின்றி வலுவான போக்குவரத்து அமைப்புகளையும் சார்ந்திருக்கிறது.


* பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி இடத்திற்கும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கும் எடுத்துச் செல்ல உறுதுணை புரிகின்றன. சமுதாய பிணைப்பை முன்னேற்றவும் பொருளாதார செழிப்பை விரைவுபடுத்தவும் நெருக்கமான போக்குவரத்து, வழித்தடங்கள் முக்கியமானவை. இவை நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் நாடுகளுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்துகிறது. துரித போக்குவரத்து வழிகளாலும், வளர்ச்சியடைந்த தகவல் தொடர்பு அமைப்பினாலும் இந்தியா மற்ற உலக நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

சாலை போக்குவரத்து :

* இந்தியாவின் சாலை வழிப்போக்குவரத்து செலவுகுறைந்த, திறனுடைய, மிகச் சிறந்த போக்குவரத்து வழியாகும். இது நாட்டின் பல்வேறு பகுதிகளை அதிக சாலைகளால் ஒன்றிணைக்கும் எளிய வழியாகும். நம் நாட்டின் நீள அகலத்திற்கேற்ப சாலை போக்குவரத்து பரந்து, விரிந்து அமைக்கப்படுகிறது.
* சாலைகள் நாட்டின் எல்லாத் தரப்பினரும் பயன்படுத்தக்கூடியது. இந்திய சாலை வழிப்போக்குவரத்து 3.314 மில்லியன் கி.மீ. நீளம் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய சாலை போக்குவரத்தாக அமைந்துள்ளது. கிராமச்சாலைகள், மாவட்ட சாலைகள்,மாநில நெடுஞ்சாலைகள, தேசிய நெடுஞ்சாலைகள், தங்க நாற்கர உயர்தர நெடுஞ்சாலை, விரைவு நெடுஞ்சாலைகள்,எல்லையோர சாலைகள் மற்றும் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

கிராமச் சாலைகள் :
* கிராம சாலைகள் பல்வேறு கிராமங்கள், நகரங்களுடன் இணைக்கும் சாலைகளாகும். இச்சாலைகள் கிராம பஞ்சாயத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 25,50,000 கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள் காணப்படுகின்றன

மாவட்டச் சாலைகள் :
* மாவட்ட சாலைகள் கிராமங்களை மாவட்டத்தின் தலைநகரங்களுடன் இணைக்கின்றன. இவற்றை மாநகராட்சிகளும் நகராட்சிகளும் பராமரிக்கின்றன. இந்தியாவில் மாவட்ட சாலைகள் 4,67,763கி.மீ. நீளத்திற்கு அமைந்துள்ளன.

மாநில நெடுஞ்சாலைகள் :
* மாநில நெடுஞ்சாலைகள் மாநிலத்தின் தலைநகரத்துடன் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களை இணைகிறது. மாநில பொதுப்பணி துறையால் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் 1,31,899 கி.மீ நீளத்திற்கு இந்தியாவில் அமைந்துள்ளன. மாநில நெடுஞ்சாலைகளுக்கு எடுத்துக் காட்டாக, கடலூர் சித்தூர் சாலையைக் கூறலாம்.
Previous Year Questions:G4-2018

57258.பட்டியலில் - இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய - நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
திருப்பூர் - ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை
சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை
கோடைகாட்- கொடைக்கானல் மாநில நெடுஞ்சாலை
சென்னை- எண்ணூர் மாநில நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலைகள் :
* மாநில தலைநகரங்களை தேசிய தலைநகரத்துடன் இணைக்கும் சாலைகளே , தேசிய நெடுஞ்சாலைகளாகும். இவை நம்நாட்டின் முதன்மை சாலை அமைப்புகளாக உள்ளன. இவற்றை மத்திய பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. இந்தியாவில் 92851.கி.மீ. துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. உதாரணமாக தேசிய நெடுஞ்சாலை 47 என்பது தமிழ் நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும். இதன் மொத்த நீளமாக 650 கி.மீ, 224 கி.மீ. நீளமுள்ள சாலைகள் தமிழ்நாட்டு மாநிலத்திற்குள் செல்கின்றன.



Previous Year Questions:G4-2016,2019
9575.மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
NH 48
NH 9
NH 45 A
NH 47 A
57666.மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
கண்ட்லா
சென்னை
பாரதீப்
கொல்கத்தா

தங்க நாற்கர சிறப்பு நெடுஞ்சாலைகள் :


* இந்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் சாலை வளர்ச்சித்திட்டமாக தங்க நாற்கர சிறப்பு தேசிய நெடுஞ் சாலைகள் அமைகின்றன. இவை ஏறத்தாழ 14,846கி.மீ. நீளத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளாக அமைந்துள்ளன.

இவற்றில் அடங்கியுள்ள முக்கிய வழிகளாவன:
ஆறுவழி சிறப்புச் சாலைகள் :
* சுமார் 5846 கி.மீ துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய மாநகரங்களை இணைக்கிறது.
Previous Year Questions:G4-2014

9315.சரியான விடை எழுது :
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?
சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்
சென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி
மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி
சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா

வடதென் பகுதிகளை இணைக்கும் சாலைகள் :
* ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கிறது. கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் சில்சார்போர்பந்தரை இணைக்கிறது. இவற்றின் மொத்த நீளம் 7300 கி.மீ. முக்கிய துறைமுகங்களை தங்க நாற்கர சாலைகளுடனும், முக்கிய இணைசாலைகளுடனும் 363 நீளத்திற்கு இணைக்கிறது. தங்க நாற்கர சிறப்பு தேசிய இணைப்பு நெடுஞ்சாலைகளின் முக்கிய நோக்கம் 'வேகம்', 'பாதுகாப்பு' மற்றும் 'நேரச்சேமிப்பு' இவை பயணநேரத்தை குறைத்து மாநகரங்களை நெருக்கமாக இணைப்பதற்காக அமைக்கப்பட்டவை. இச்செயல் திட்டங்கள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இச்செயல் திட்டத்திற்கு அதிக முதலீட்டை ஈடுபடுத்த வேண்டியிருப்பதால் அரசு தனியார் நிறுவனங்களிடம் முதலீடு செய்யவும், நெடுஞ்சாலையை மேம்படுத்தி பராமரிக்கும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. 'கட்டு, செயல்படுத்து மாற்று' (Build, Operate and Transfer - BOT) என்ற கருத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்த காலத்திற்குள் கட்டுமானச் செலவு செய்ததையும், லாபத்தையும் பெற்றபின், அரசிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிடும்.

விரைவுவழிச்சாலைகள் :
* விரைவு வழிச்சாலைகள் என்பது மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய உயர்தா இந்திய சாலை வலையமைப்பு ஆகும். இவை 200 கி.மீ தூரத்திற்கு அதிகமான நீளமான ஆறு வழிச் சாலைகளாகும். எடுத்துக்காட்டு மும்பையிலிருந்து புனே செல்லும் விரைவு வழிச்சாலை.


எல்லையோரச்சாலைகள் (Border Roads) :
* எல்லையோர சாலைகள் நம் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு 1960ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட எல்லையோர அமைப்பு (Border Roads Organisation) இச்சாலைகளைப் பராமரிக்கிறது. இவ்வமைப்பு (BRO) தேசிய வளர்ச்சிக்கும் தேசிய ஒற்றுமைக்கும் ஒரு அடையாள சின்னமாகவும், தேசிய பாதுகாப்பினை பராமரிப்பதற்கும் இந்தியாவின் ஓர் பிரிக்க முடியாக கூறாகவும் கருதப்படுகிறது. இவ்வமைப்பு 46,780 கி.மீ நீளங்கொண்ட சாலைகள் கடினமான நில அமைப்புகளில் உள்ளது.




பன்னாட்டு நெடுஞ்சாலை :
* இது நம் நாட்டை, அண்டை நாடுகளுடன் இணைக்கிறது. இதனால் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு வளர்கிறது.

இரயில் போக்குவரத்து :

* இரயில் போக்குவரத்து பயணி மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் மிகச் சிறந்த போக்குவரத்து சாதனமாகும். நாட்டின் தொலைவில் உள்ள மக்களை இணைக்கிறது. இது வணிகம், கல்வி, சுற்றுலா மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்கிறது.
* இரயில் போக்குவரத்து முதன் முதலில் 1853 ஆம் ஆண்டு தொடங்கியது. 1947ஆம் ஆண்டு வரை 42 இரயில் போக்குவரத்து தொகுதிகள் 37 தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டன. 1951ஆம் ஆண்டு அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டு இந்திய இரயில்வே என ஒருங்கிணைக்கப்பட்டது.



* இந்திய இரயில் போக்குவரத்து துறையானது உலகளவில் நான்காவது இடத்தையும், ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. இது குறுக்கிலும் நெடுக்கிலுமாக 63, 273 கி.மீ 7025 இரயில் நிலையங்களை இணைக்கிறது.
* ரயில் போக்குவரத்து தினந்தோறும் 20 மில்லியன் பயணிகளையும் 2 மில்லியன் டன்னுக்கும் மேற்பட்ட சரக்குகளையும் ஏற்றிச் செல்கிறது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட இரயில் போக்குவரத்து அங்கிருந்து எல்லாத் திசைகளிலும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பெருநகரங்களையும் இணைக்கிறது. இரயில் போக்குவரத்து வலையானது 1.அகலப்பாதை (1.676மீ) 2. மீட்டர்பாதை (1.00மீ) 3. குறுகிய பாதைகளில்(0.672மீ) செயல்படுகிறது.


Previous Year Questions:G4-2011
57459.கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
மத்திய இரயில்வே மண்டலம் - மும்பை
கிழக்கு இரயில்வே மண்டலம் - சென்னை
வடக்கு இரயில்வே மண்டலம் - கோரக்பூர்
தெற்கு இரயில்வே மண்டலம் - மாலிகான்
57804.மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
மும்பை
ஹுப்ளி
புது டெல்லி
ஜபல்பூர்

இந்திய இரயில் போக்குவரத்து தொகுதியில் இயற்கையமைப்பின் பங்கு :
* இந்தியாவின் இயற்கை அமைப்பு இரயில் போக்குவரத்து அமைப்பில் பெரும் பங்குவகிக்கிறது.
* கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்ட இமயமலை பகுதிகளில் இரயில் பாதை அமைப்பது மிகவும் கடினமான செயல் இருப்பினும் மூன்று இரயில் பாதைகள் மட்டுமே காணப்படுகின்றன.
* மேற்கு ராஜஸ்தானின் வறட்சி, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், வட கிழக்கு இந்தியாவின் அடர்ந்த காடுகள் மற்றும் கரடு முரடான தரையமைப்பு போன்றவற்றால் இப் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் இரயில் பாதைகள் அமையவழி வகுத்துள்ளது.
* வடஇந்திய சமவெளி வளமிக்க வண்டல்மண் கொண்ட சமநிலம், அதிக மக்கள் தொகை கொண்டது. வளர்ச்சி பெற்ற விவசாய நிலங்களும், தொழில கப்பகுதிகளும் நிறைந்துள்ளன. அதனால் இப்பகுதி அடர்ந்த இரயில் பாதை வலையமைப்பை கொண்ட பகுதியாக அமைந்துள்ளது.
* தீபகற்ப இந்தியா மேடுபள்ளங்களைக் கொண்ட பீடபூமிப் பகுதியை உடையது. எனவே, மிதமான இரயில் வலையமைப்பே காணப்படுகின்றது.


புறநகர் இரயில் போக்குவரத்து :
* மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய பெருநகரங்களில் புறநகர் இரயில் போக்குவரத்திற்கென தனியாக இரயில் பாதைகள் உள்ளன. கான்பூர், ஹைதராபாத் மற்றும் புனே நகரங்களில் புறநகர் இரயில்களுக்கான தனி இரயில் பாதைகள் இல்லை. அவை நீண்டதூரம் செல்லும் இரயில்கள் செல்லும் பாதையையே பகிர்ந்து கொள்கின்றன. புறநகர் இரயில்கள் புறநகர் பகுதி மக்களை நகரத்தோடு இணைக்கின்றன. அவை பெரும்பாலும் மின்சார இரயில்களாகும். (EMU) அவைகள் சாதாரணமாக ஒன்பது பெட்டிகளைக் கொண்டிருக்கும். கூட்ட நேரங்களில் நெரிசலைத் தவிர்ப்பதற்கு கூடு தலாகபெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

பறக்கும் இரயில் (MRTS) மற்றும் மெட்ரோ இரயில் - சென்னை :
* பறக்கும் இரயில் என்பது உயரத்தில் அமைக்கப்பட்ட இரயில்பாதையில் செல்பவை. தற்சமயம், சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை 25 கி.மீ. தூரத்திற்கு (17 இரயில் நிலையங்கள்) செல்கிறது.



Previous Year Questions:G4-2019
57650.100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
ஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
57760.இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட __ நகரமாகும்.
முதலாவது
ஐந்தாவது
ஆறாவது
இரண்டாவது

இந்திய பொருளாதரத்தில் இரயில் போக்குவரத்தின் பங்கு :
* அதிக எடையுள்ள பொருட்களை பெருமளவில் எடுத்துச் செல்ல இரயில் போக்குவரத்து உதவி புரிகிறது. இரும்பு எஃகு, எண்ணெய், கட்டுமானப் பொருட்கள், நிலக்கரி மற்றும் உலோக மூலப் பொருட்கள்.
* வேறுபாடு இல்லாத தேசிய சந்தை, சமமான விலை, உள் மற்றும் வெளிநாடுகளுடன் வணிக வளர்ச்சி ஆகியவற்றிற்கு இரயில் போக்குவரத்து உதவிபுரிகிறது.
* வறட்சி காலங்களில் அத்தியாவசியப் பொருட்களை விரைவாக கொண்டு செல்ல இரயில் போக்குவரத்து மிகவும் உதவியாக உள்ளது.
* நிர்வாகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் இரயில் போக்குவரத்து பெரும்பங்கு வகிக்கிறது.

இந்திய இருப்புப் பாதைகள் :

Previous Year Questions:G4-2019
57794."மென்டிபதார்” இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
சிக்கிம்
மேகாலயா
திரிபுரா
நாகலாந்து

குழாய் வழி போக்குவரத்து :

* முற்காலத்தில் நீரை நகரங்களுக்குக் கொண்டு செல்ல குழாய் வழி போக்குவரத்து பயன்படுத்தப்பட்டது. தற்போது, எண்ணெய் மற்றும் வாயுக்களைக் கொண்டு செல்ல பயன்படுகின்றன. எண்ணெய் மற்றும் இயற்கைவாயு (01T FTeld) தளங்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் இரசாயன உரத் தொழிலகங்களுக்கும், அனல் மின்நிலையங்களுக்கும் எடுத்துச்செல்ல குழாய் வழிபோக்குவரத்து பயன்படுகிறது.

குழாய் போக்குவரத்தின் பயன்கள் :
* கரடுமுரடான தரைப்பகுதியிலும் நீருக்கடியிலும் குழாய் வழி போக்குவரத்தை அமைக்க இயலும்.
* குழாய் போக்குவரத்தை அமைப்பதற்கு முதலில் ஆகும் செலவு அதிகம். ஆனால் தொடர்ந்து பாராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் செலவு குறைவாகும்.
* இது தங்குதடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதுடன் கப்பலில் ஏற்றி இறக்கும்போது ஏற்படும் இழப்பையும் மற்றும் தாமதத்தையும் குறைக்கிறது
* இதனை இயக்குவதற்கு குறைந்த அளவேளிபொருள் தேவைப்படுகிறது.

* நம்நாட்டில் மூன்று முக்கியமான குழாய் வழிப்போக்கு வரத்து வலை காணப்படுகின்றது.
1. மேல் அஸ்ஸாம் எண்ணெய் கிணறுகளிலிருந்து கௌஹாத்தி, பரூனி, அலகாபாத் வழியாக உத்திரபிரதேசத்திலுள்ள கான்பூர் வரை செல்லும் குழாய் போக்குவரத்து.
2. குஜராத்திலுள்ள சலாயாவிலிருந்து விராம்கம், மதுரா, டெல்லி, சோனிபாத் வழியாக பஞ்சாபிலுள்ள ஜலந்தர் வரை செல்லும் குழாய் போக்குவரத்து
3. எரிவாயு குழாய் போக்குவரத்துகுஜராத்திலுள்ள ஹஜிராவிலிருந்து மத்திய பிரதேசத்தின் விஜய்ப்பூர் வழியாக உத்திரபிதேசத்திலுள்ள ஜெகதிஷ்பூர் வரை செல்லும் குழாய் போக்குவரத்து.

* இவற்றைத் தவிர மும்பை கடலிலுள்ள 'மும்பைடஹை' எண்ணெய் கிணறுகளிலிருந்து மும்பைக்கும், மும்பையிலிருந்து புனேக்கும் இடையில் அமைந்துள்ள குழாய்வழிகளும் இதில் அடங்கும்

நீர்வழிப் போக்குவரத்து :


* நீர்வழிப்போக்குவரத்து, மலிவான போக்குவரத்து ஆகும். அதிக எடையுள்ள கனமான பொருள்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல தகுந்த வழிநீர்வழியாகும். எரிபொருள் சிக்கனமாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் உள்ள போக்குவரத்து ஆகும். நீர் வழிப்போக்குவரத்து, உள்நாட்டு போக்குவரத்து மற்றும் கடல் வழிப்போக்குவரத்து என இரு வகைப்படும்.

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து :
* இந்தியா, ஆறுகளையும், கால் வாய்களையும் மற்றும் காயல்களையும் உள்ளடக்கிய பெரும் வலையமைப்பைக் கொண்டதாகும். நீர்வழிப்போக்குவரத்து மொத்தம் 14,500 கி.மீ. தூரம் நடை பெறுகிறது. அதில் 5685 கி.மீ. தூரம் ஆறுகளிலும் 400 கி.மீ. தூரம் கால்வாய்களிலும் எந்திரப்படகுகள் மூலம் நடைபெறுகிறது. இந்திய நீர்வழி ஆணையம் 5 தேசிய நீர்வழிகளை கண்டறிந்துள்ளது.

தேசிய நீர்வழி எண். 1 கங்கையில் உள்ள அலகாபாத்-ஹால்டியா பாதை
தேசிய நீர்வழி எண். 2 . பிரம்மபுத்திராவில் உள்ள சையதியா-துபரி பாதை
தேசிய நீர்வழி எண். 3. மேற்குகடற் கரையில் சம்பக்கார கால்வாய் மற்றும் உத்யோக மண்டல்கால்வாய் - கொல்லம்கோட்டாபுரம் பாதை
தேசிய நீர்வழி எண். 4. கிருஷ்ணா , கோதாவரி ஆறுகளில் உள்ள வசிராபாத், விஜயவாடா பாதை, காக்கிநாடாபுதுச்சேரி பாதை, பத்ராசலம் ராஜமுந்திரிப் பாதை
தேசிய நீர்வழி எண். 5. மகாநதி, பிராமணி ஆறுகளின் தல்ச்சார்-தம்மாரா பாதை, கிழக்குக் கடற்கரை கால்வாய் மங்கல்காடி - பாரதீப் வரை நீடித்திருக்கிறது. கடல்வழிப் போக்குவரத்து

* இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ ஆகும். இதில் 13 பெரிய துறைமுகங்களும் 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் கொண்டு அமைந்துள்ளது. இத்துறைமுகங்களின் வழியாக 95 சதவீத வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது. பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக பொறுப்புக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் மாநில அரசால் நிர்வகிக்கப்படுகின்றன.
* மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் கண்ட்லா , மும்பை , ஜவஹர்லால் நேரு, மர்மகோவா, புது மங்களூர் மற்றும் கொச்சி ஆகியனவாகும். கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் தூத்துக்குடி, சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரதீப், ஹால்தியா மற்றும் கொல்கத்தா ஆகியவை.
* இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாம் இடத்திலும், உலகில் 16வது இடத்தையும் பெறுகிறது இந்தியாவில் நான்கு முக்கிய கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன.

Previous Year Questions:G4-2016
9479.பொருத்துக:
(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்
(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா 4. ஒரிசா
3 2 4 1
4 1 3 2
2 3 1 4
2 1 4 3

அவையாவன:
1. இந்துஸ்தான் கப்பல்கட்டும் தளம் - விசாகப்பட்டினம்
2. கார்டன் ரீச் தொழிற்சாலை - கொல்கத்தா
3. மேசகான்டாக் - மும்பை
4.கொச்சி கப்பல் கட்டும் தளம்கொச்சி

*இந்திய அரசு துறைமுகத்துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை வழங்கியுள்ளது. இந்திய துறைமுகச் சட்டம் 1908 மற்றும் துறைமுகச் சட்டம் 1963 இவை இரண்டும் தனியார் முதலீடு செய்வதற்கு வழிகோலின.


Previous Year Questions:G4-2014,2013
9381.இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்
கொச்சி
கொல்கத்தா
மும்பை
விசாகப்பட்டினம்
10080.கப்பல்துறையினை தெரிந்தெடுத்து அதன் பெயரை குறியிடுக
பாரதீப், கொச்சின், சென்னை, மங்களூர்
மங்களுர், பாரதீப், சென்னை, கொச்சின்
மங்களூர், கொச்சின், சென்னை, பாரதீப்
கொச்சின், மங்களுர், சென்னை, பாரதீப்

வான்வழிப் போக்குவரத்து :


* வான்வழி போக்குவரத்து விரைவான, விலையுயர்ந்த, வசதியான மற்றும் நவீன போக்குவரத்தாகும். அவைகள் பயணிகள், சரக்குகள் மற்றும் அஞ்சல் ஆகியவற்றை ஏற்றிச் செல்கின்றன. இது உள்ளூர் மற்றும் பன்னாட்டு நகரங்களுடன் இணைக்கிறது. உயர்ந்த மலைகள், பாலைவனங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் போன்ற இடங்களையும் எளிதில் இணைக்க வல்லது. முதல் வான்வழிப் போக்குவரத்து இந்தியாவில் 1911ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் உண்மையான தொடக்கம் 1932ல் ஜே.ஆர்.டிடாடா அவர்களால் டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. இது 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு, பின்னர் 1953ல் வான்வழி போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு போக்குவரத்திற்கும் ஏர் இந்தியா வெளிநாட்டு போக்குவரத்திற்கும் ஏற்படுத்தப்பட்டது. இவ்விரண்டு வான்வழி நிறுவனங்கள் மட்டுமே இந்திய வான்வழிச் சேவையை 1986-ஆம் ஆண்டு வரை மேற்கொண்டு வந்தன. பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையினால் பல தனியார் வான் வழி நிறுவனங்களும் இதில் இணைந்து கொண்டன.


* 2007ஆம் ஆண்டு இந்திய அரசு ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்து நேஷனல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் உருவானது.
* NACIL(A)(National Aviation Company of India Limited) பன்னாட்டு விமான சேவைகளையும் NACIL(I) உள்நாட்டு மற்றும் ஆசியா நாடு தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் விமானங்களை இயக்கிவருகிறது. 159 வானூர்திகளையும் போயிங் விமானங்களையும் இது இயக்குகிறது. இந்திய நகரங்களை உலகின் பெரும் நகரங்களுடன் இணைப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. NACILஐத் தவிர தனியார் நிறுவனங்களான, ஸ்பைஸ் ஜெட், இண்டர்குளோப் ஏவியேஷன் (இன்டிகோ) போன்றவை உள்நாட்டு வான் வழி சேவைகளைச் செய்து வருகின்றன.


* இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் ( Airport Authority of India) 1995 ல் அமைக்கப்பட்டது. இது உலகத் தரத்திற்கு இந்திய விமான நிலையங்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதற்கு நிறுவப்பட்டது. தற்சமயம் 129 விமான நிலையங்களை இயக்கிவருகிறது. இதில் 17 பன்னாட்டு விமான நிலையங்கள் ஆகும்.
* பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் கடல் சார்ந்த பணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை அளிக்கிறது. மேலும் இந்நிறுவனம் பல்வேறு மாநில அரசுகளுக்கும் சேவை புரிகிறது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களிலுள்ள எளிதில் செல்ல முடியாத பகுதிகளையும் தொடர்பு கொள்ளச் செய்கிறது.


Previous Year Questions:G4-2014
9409.உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர்லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது?
ரஷ்யா
இஸ்ரேல்
பிரிட்டன்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Share with Friends