Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் உணவே மருந்து

  • தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
  • பசியின் கொடுமையை “பசிப்பிணி என்னும் பாவி” என மணிமேகலை கூறுகிறது.
  • “உண்டி கொடுதோர் உயிர் கொடுத்தோரே” என மணிமேகலையும், புறநானூறும் கூறுகின்றன.
  • திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
  • நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.
  • நோய்க்கு முதல் காரணம் உப்பு.
  • “மீதூண் விரும்பேல்” என்றவர் ஔவை.


நோய் நீக்கும் மூலிகைகள்

துளசி:

  • துளசி செடியின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
  • துளசி இலைகள் பூசினால் படை நீங்கும்.

கீழ்க்காய்நெல்லி:

    இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் கூறுவர். மஞ்சட் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது. இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.

தூதுவளை:

    இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது. இக்கொடியில் சிறு முள்கள் உண்டு. இதனை தூதுளை, சிங்கவல்லி என்றும் அழைப்பர். வள்ளலார் இதனை “ஞானப்பச்சிலை” என்று கூறுவார். இது குறள் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீடிக்கும்.

குப்பைமேனி:

    குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து. இதனை “மேனி துலங்க குப்பைமேனி” என்று சிறபிப்பர்.

கற்றாழை:

    இது வறண்ட நிலத்தாவரம். இதனை “குமரி” என்பர். பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்பர்.

முருங்கை:

    இதனை அரைத்து தடவினால் எலும்பு முறிவு விரைவில் கூடும். இரும்பு சத்து நிறைந்துள்ளதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும் பங்கு உண்டு.

கறிவேப்பிலலை:

    இது சீதபேதி, நச்சு போன்றவற்றை சரிசெய்யும்.

கரிசலாங்கண்ணி:

    இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து. கண் பார்வையை தெளிவாக்கும். நரையை போக்கும். இதனை “கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்” என்று கூறுவர்.

பிற மூலிகைகள்:

    மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண்னையும், குடற்புண்ணையும் குணபடுத்தும். அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும். வல்லாரை நினைவாற்றலை பெருக்க உதவும்.

Share with Friends