Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA சங்க இலக்கியத் திணைகள் One liner QA

பொதுத்தமிழ் - சங்க இலக்கியத் திணைகள்

01. தமிழில் திணை என்னும் சொல் எந்த பொருளைத் தரும் - பிரிவு

02. திணிவைப் பிரித்துக் காட்டுவது எது - திணை

03. மலையும் மலை சார்ந்த நிலமும் எது - குறிஞ்சி

04. காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை

05. வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்

06. கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்

07. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற நிலம் - பாலை

08. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்) - குறிஞ்சி

09. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்) - முல்லை

10. ஊடலும் ஊடல் நிமித்தமும் - மருதம்

11. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் (வருந்துதல்) - நெய்தல்

12. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் - பாலை

13. பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது - பாடாண் திணை

14. உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை - காஞ்சித் திணை

15. மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது - வாகைத் திணை

16. படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது - தும்பைத் திணை

17. ஒரு அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது - உழிஞைத் திணை

18. மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது - வஞ்சித் திணை

19. ஒரு மன்னன் எதிரி நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதையும். அந்த ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை - வெட்சித் திணை

20. புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும் - 7

Share with Friends