Easy Tutorial
For Competitive Exams

GS - Zoology (விலங்கியல்) பாலூட்டிகள் மற்றும் பறவைகள்

பாலூட்டிகள் மற்றும் பறவைகள்

பாலூட்டிகள்

  • பாலூட்டிகள் பல்வேறுபட்ட தகவமைப்புகளுடன் பல்வேறு சூழ்நிலைகளில் சிறப்பாக வாழ்ந்து வரும் விலங்கினக் கூட்டமாகும்.
  • உலகின் எல்லாவிதமான வாழ்விடங்களான, கடல், நன்னீர், மலை, காடுகள், பாலைவனங்கள், துருவப் பிரதேசங்கள், சதுப்புநிலக் காடுகளில் பாலூட்டிகள் வாழ்ந்து வருகின்றன.
புற அமைப்பியல்
  • வெவ்வேறு வாழ்விடங்களில் வாழ்கின்ற பாலூட்டிகள் அந்தந்த வாழ்விடங்களுக்கு ஏற்றவாறு புறத்தோற்ற உடலமைப்புகளுடன் வாழ்கின்றன.
  • கடலில் வாழும் பாலூட்டிகளான டால்பின், திமிங்கலம் போன்றவை உடலமைப்பிலும், செயல்பாட்டிலும் மீனைப் போல் இல்லாமல் மாறுபட்டுள்ளது.
  • அவை நிலப் பாலூட்டிகளிலிருந்து தோன்றியவையாகும்.
  • வானத்தில் பறக்கும் இருளை விரும்பும் வௌவால், பறவைகளின் உடலமைப்பை ஒத்துள்ளன.
  • ஆனாலும் அது ஒரு பாலூட்டியாகும்.
  • நிலத்தில் வாழும் மிகப்பெரிய உடலமைப்பை உடைய விலங்குகள் யாவும் பாலூட்டிகளாகும்.
  • பாலூட்டிகளின் உடலளவு நிலத்தில் வாழும் மற்ற விலங்குகளின் உடல் அளவிலிருந்து மாறுபட்டுள்ளது.
  • கீழ்க்காணும் இரண்டு அடிப்படைப் பண்புகளால் மற்ற முதுகெலும்புள்ள விலங்குகளில் இருந்து பாலூட்டிகள் வேறுபட்டுள்ளன.
  • இப்பண்புகள் பாலூட்டிகளிடம் மட்டும் காணப்படுகின்றன. மற்ற முதுகெலும்பிகளிடம் காணப்படுவதில்லை. அவை
  • புற அடுக்கு உரோமங்கள்
  • பால் சுரப்பிகள் புற அடுக்கு உரோமங்கள்
  • அனைத்துப் பாலூட்டிகளுக்கும் உரோமங்கள் உள்ளன.
  • புற அடுக்கு உரோமங்கள் இல்லாத திமிங்கலம், டால்பின்களுக்கு, மூக்கின் நுனியில் உணர் இழைகள் அமைந்துள்ளன.
  • பாலூட்டிகளின் உரோமமானது உடலின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கக்கூடிய தோலின் ஒரு சிறப்பு அமைப்பாகும்.
  • பாலூட்டிகளில் தோலின் நிறமும், அமைவும் சுற்றுப்புறத்திற்கேற்றவாறு அமைந்துள்ளது.
  • உரோமங்கள் ஓர் உணர்வுறுப்பு. பூனை, நாயின் மீசைகள் தொடுவுணர்வுடையவை.
  • முள்ளம்பன்றி போன்ற விலங்குகள் தம்மை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள, நீளமான கூர்மையான, விரைப்பாக உள்ள உரோமங்களைப் பயன்படுத்துகின்றன.
  • நாய், பூனை, மாடு, மனிதன், குதிரை, கழுதைகளின் உரோமங்களைச் சேகரித்து அவற்றின் வடிவம், அமைப்பு, பண்பு இவற்றை அட்டவணைப்படுத்தவும்.
  • பால் சுரப்பிகள் பெண் பாலூட்டிகள் அனைத்திற்கும் பால் சுரப்பிகள் உள்ளன.
  • புதிதாகப் பிறக்கும் பற்களில்லாத பாலூட்டிகள் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன.
  • பால்சுரப்பிகள் மாறுபாடடைந்த வியர்வைச் சுரப்பிகளாகும்.
வாழிடம்
  • உயிரினங்கள் வாழும் இடத்திற்கு வாழிடம் என்று பெயர்.
  • பாலூட்டிகள் தாம் வாழும் வாழிடத்திற்குத் தக்கவாறு பிரத்தியேகத் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
  • நாம் பாலூட்டிகளை உயர்ந்த மலைகளிலும், சமவெளிகளிலும், காடுகளிலும், தூந்திரப் பகுதி களிலும், பாலைவனங்களிலும், புல்வெளிகளிலும், நன்னீர் நிலைகளிலும், கடல் நீரிலும் காணலாம்.
  • சில முக்கியமான பாலூட்டிகளின் வேறுபட்ட வாழிடங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • உயர்ந்த மலைகள்: மலையாடுகள், கொம்புடைய செம்மறியாடுகள், கரடிகள்.
  • சமவெளிகள், காடுகள்: முள்ளம்பன்றி, மலை அணில், மான்கள், யானைகள், புலிகள், சிறுத்தை, காண்டாமிருகம், நீர்யானை.
  • நன்னீர்: பீவர், பிளாட்டிபஸ், நீர்நாய் போன்றவை.
  • தூந்திரப்பகுதி: மலையாடுகள், எருமை, எலி (கொறிக்கும் விலங்குகள்)
  • பாலைவனம்: இந்திய வனக்கழுதை, பிளாக் பக் மான்கள்.
  • கடல் நீர்: திமிங்கலம், டால்பின், வால்ரஸ், கடற்பசு,கடற்சிங்கம் (சீல்).
பாலூட்டிகளின் தகவமைப்புகள்

பாலூட்டிகள் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்வதில் சிறப்புப் பெற்றுள்ளன.

  • கடலில் வாழும் திமிங்கலம், டால்பின்கள் போன்றவற்றில் நீந்துவதற்கு ஏற்றவாறு முன்கைகள் துடுப்புகளாக மாறுபாடு அடைந்துள்ளன.உடல் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதுவாக இவ்விலங்குகளில் மிக அதிக அளவில் கொழுப்புத் திட்டுக்கள் சேமிக்கப்படுகின்றன.திமிங்கலங்களின் தாடையானது சல்லடை போன்ற உறுப்பாக மாறுபாடு அடைந்துள்ளது. இந்தச் சல்லடை போன்ற தாடை, பலீன் தட்டுகள் எனப்படும். திமிங்கலங்கள் தங்கள் விருப்பமான உணவான கிரில் (Krill) எனப்படும் மிதவை உயிரிகளை நீரிலிருந்து வடிகட்டுவதற்கு இந்தப் பலீன் தட்டுகள் பயன்படுகின்றன.
  • பாலைவனத்தில் வாழும் ஒட்டகத்தின் தோல் மிகவும் தடிமனானது.அது நீரை ஈர்த்து வைத்துக்கொள்ளும் ஆஸ்மாட்டிக் செல்களையும் கொண்டுள்ளது.பாலைவன மணல்காற்று தாக்காமல் காக்க ஒட்டகத்தின் அடர்த்தியான கண் புருவங்கள் பயன்படுகின்றன.ஒட்டகத்தின் நாசித் துளை, மணல் துகள்கள் உள்ளே புகாவண்ணம் அமைந்திருக்கின்றது.
  • பெரும்பாலான பாலூட்டிகள் தாவர உண்ணிகளாகும்.செல்லுலோஸ் மிகுந்த உணவைச் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு பகிர்ந்து வாழும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளன. இந்த பாக்டீரியங்கள் செல்லுலோஸை சிதைக்கும் நொதிகளைக் கொண்டுள்ளன.
  • கால்நடைகளில், மான்கள், பசு, எருமை,ஆடு போன்ற பாலூட்டிகளின் நான்கு பெரிய அறைகளையுடைய இரைப்பை, சேமிப்பு, நொதித்தல் கலனாக உள்ளது. கால்நடைகளில் இவ்வகை இரைப்பை அசைபோடுவதற்குப் பயன்படுகிறது.
  • பாலூட்டிகளில் வேறுபட்ட பல் அமைப்பு மற்றும் பல்வேறுபட்ட பற்களின் அமைப்பு உண்ணும் முறைக்கு ஏற்பத் தகவமைந்ததாக உள்ளது. எடுத்துக்காட்டாக, மாமிச உண்ணிகளில் மாமிசத்தைக் கிழிப்பதற்கு ஏற்றவாறு முன்பற்களாகவும், யானைகளின் வெட்டும் பற்கள் தந்தங்களாக மாறி பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன. மேலும் அவை அவற்றின் பாதுகாப்பிற்கும் பயன்படுகின்றன.
  • பாலூட்டிகளில் ஆற்றலுடன் பறக்கும் ஒரே பாலூட்டி வௌவால் ஆகும். இதன்முன்கைகள் இறக்கை போன்ற அமைப்பாக மாறி உள்ளன. வௌவாலின் இறக்கை (பெடாஜியம்) மென்மையான தோலுடனும், முன்கையுடன் இணைந்த விரல்கள், எலும்புகளுடன் இணைந்து, தசைகளுடன் நீட்சியடைந்து உள்ளது. வௌவால் தலைகீழாகத் தொங்கி ஓய்வு எடுக்கிறது. இரவில் உலவும் வௌவால் எப்பொருளிலும் மோதாமல் பறக்கவும் தன் இரையைப் பிடிக்கவும் மீயொலி உணர்திறனைப் பயன்படுத்துகிறது. வௌவால் பறக்கும்போது உயர் சுரத்தில் கீச்சிடும் ஒலி வெளிப்படுத்துதல் மூலம் பறக்கும் பூச்சிகள், எதிர்ப்படும் பொருள்களை அறிந்து கொள்கிறது.)
  • மார்சூபியல் (கங்காரு போன்றவை) குட்டிகளைச் சுமந்து பாதுகாக்க வயிற்றில் பைகளைக் கொண்டுள்ளன. துருவக் கரடிகளின் தடித்த தோல், அவற்றின் மேலுள்ள உரோமக் கம்பளிப் போர்வை மூலம், துருவப் பகுதியின் நடுங்கும் குளிரில் இருந்து பாதுகாப்புப் பெறுகிறது.
  • தன் அறிவுக் கூர்மையால் சமூக விலங்காக, உயர்ந்த நிலையில் உள்ள மனிதன், தன் விரல்கள் மூலமாக நுணுக்கமான செயல்பாடுகளைச் செய்யும் வகையில் நுண்பொருள்களைக் கையாளுதல், எழுதுதல் போன்ற செயல்களைச் செய்ய முடிகிறது.
அடிப்படை உடற்செயலியல் செயல்பாடுகள்
  • பிறவகை முதுகெலும்பிகளைவிட பாலூட்டிகளின் உடலியல் செயல்கள் மேம்பட்டதாகவும், சிக்கலானதாகவும் உள்ளது.
  • பாலூட்டிகள், வெப்ப இரத்த விலங்குகளாகும். இவற்றின் உடல் வெப்பநிலை வாழிட வெப்பத்தின் தாக்கமின்றி ஒரே சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.
  • மனிதனின் உடல் வெப்பநிலை 98.4° F இலிருந்து 98.6° F ஆக உள்ளது.
  • இவ்வுடல் வெப்பநிலை தோலில் உள்ள வியர்வைச் சுரப்பி, சிறுநீரகம், நுரையீரல், இரத்தம் மூலம் நிலைநிறுத்தப்படுகிறது.
  • கோடைக்காலத்தில் உடலைக் குளிர்விக்க வியர்வையை அதிகமாகச் சுரந்து வெப்பத்தை வெளியேற்றுகிறது.
  • இச்செயல் கூடுதலான இரத்தம், வியர்வைச் சுரப்பிகளில் செலுத்துதல் மூலமாகவும், அதிகமான நீர் வியர்வை மூலம் வெளியேற்றப்படுவதாலும் சிறுநீரகம் குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது.
  • குளிர்காலங்களில், மிகவும் குறைவான வியர்வையை வெளியேற்றி, உடல் வெப்பநிலையை உயர்த்தும் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.
  • இந்நிலை வியர்வைச் சுரப்பிகளில் குறைவான இரத்தத்தைச் செலுத்துவதன்மூலம் உடல் வெப்பநிலை உயர்கிறது.
  • ஆனால், சிறுநீரகம் அதிகமான சிறுநீரை வெளியேற்றுகிறது.
  • பாலூட்டியின் இரத்தச் சிவப்பணுவில் ஹீமோகுளோபின் என்னும் நிறமி அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.
  • பாலூட்டிகளின் இரத்தச் சிவப்பணுவில் உட்கரு இல்லை. இவ்விடம் ஹீமோகுளோபினால் நிரப்பப்பட்டுள்ளது.

பறவைகள்:

உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.

  • அதிக பனி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்
  • பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
  • ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.
  • வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன.
பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.
  • தென்னை குடித்து வாழும் பறவைகள்
  • பழத்தை உண்டு வாழும் பறவைகள்
  • பூச்சியை தின்று வாழும் பறவைகள்
  • வேட்டையாடி உண்ணும் பறவைகள்
  • இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.

பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.

சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.

நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.

மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.

  • தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13
  • பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
  • உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
  • நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
  • பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.
  • வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.
  • அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.
  • அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.
  • நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:
  • வேடந்தாங்கல்
  • கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்)
  • கஞ்சிரால்குளம்
  • சித்திரஸ்குடி
  • மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
  • பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்)
  • உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்)
  • வடுவூர் (தஞ்சை மாவட்டம்)
  • கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்)
  • வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்)
  • வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
  • கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்)
  • கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)

தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.

Share with Friends