இயல் இரண்டு - இயற்கை
1.கவிதைப்பேழை - சிலப்பதிகாரம்
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்",
"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்",
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்"
- என்ற பாடலை இயற்றியவர் - இளங்கோவடிகள்
சொல்லும் பொருளும் :
1.திங்கள் - நிலவு
2.கொங்கு - மகரந்தம்
3.அலர் - மலர்தல்
4.திகிரி - ஆணைச்சக்கரம்
5.பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
6.மேரு - இமயமலை
7.நாமநீர் - அச்சம் தரும் கடல்
8.அளி - கருணை
• தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் - சோழ மன்னன்
• காவிரி ஆறு பாயும் நாடு - சோழநாடு
• பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை கதிரவன் வலப்புறமாகச் சுற்றிவருகிறது.
நூல் வெளி :
• சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்
• இளங்கோவடிகள் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரம் பதிகம் கூறுகிறது
• இளங்கோவடிகள் நூற்றாண்டு - கி.பி.2
• இதுவே தமிழின் முதல் காப்பியம்.
• முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படும் நூல் - சிலப்பதிகாரம்
• இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படும் நூல்களில் ஒன்று - சிலப்பதிகாரம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
2.கவிதைப்பேழை - காணி நிலம்
"காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்"
முத்துச் சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும் - அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதில் பட வேண்டும்"
- பாரதியார்
சொல்லும் பொருளும் :
1)காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
2)மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
3)சித்தம் - உள்ளம்
நூல் வெளி :
• இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
• பாரதியாரின் இயற்பெயர் - சுப்பிரமணியன்.
• இளைமயிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
• எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
• தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
• மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
• நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
• பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்கைள இயற்றி உள்ளார்.
• பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பொருத்துக.
1.முத்துச்சுடர்போல - மாடங்கள் - 2
2.தூய நிறத்தில் - தென்றல் - 3
3.சித்தம் மகிழ்ந்திட - நிலாஒளி - 1
3. உரைநடை உலகம் - சிறகின் ஓசை
• பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
• உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம்
பெயர்கின்றன.
• நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.
• பொதுவாக பறவைகள் வடக்கு-தெற்கு,மேற்கு-கிழக்கு திசையை நோக்கி வலசை போகின்றன.
வலசையின்போது பறவைகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
1) தலையில் சிறகு வளர்தல்
2) இறகுகளின் நிறம் மாறுதல்
3) உடலில் கற்றையாக முடி வளர்தல்
• சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate Bird).
• இது தரையிறங்காமல் 400 கிலோமீட்டர் வரை பறக்கக் கூடிய திறனுடையது.
• இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
• தமிழகத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது பற்றி 1500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சத்திமுத்தப்
புலவர் பாடியுள்ளார்.
"நாராய், நாராய், செங்கால் நாராய்
தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" - சத்திமுத்தப் புலவர்
• ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிட்டுக்குருவி
• தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் எது? - சிட்டுக்குருவி
• சிட்டுக்குருவி இனத்தில் ஆண், பெண் வேறுபாட்டில், ஆண் குருவியின் தொண்டைப் பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும்,
• உடல் பகுதி அடர் பழுப்பு நிறமாக இருக்கும்.பெண் குருவியின் உடல் முழுவதும் மயங்கிய பழுப்பு நிறத்தில்
இருக்கும்
• கூடு கட்டிய பின் சிட்டுக்குருவி 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
• சிட்டுக்குருவியின் அடைகாக்கும் காலம் - 14
• சிட்டுக்குருவி 15 நாளில் குஞ்சு பொறிக்கும்.
• சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி - துருவப் பகுதி
• இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன.
• சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழுபூச்சிகளையே உட்கொள்ளும்.
• சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.
• சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது.ஆனாலும் வேகமாகப் பறக்கும்.அதனால்தா ன் விரைவாகச் செல்பவனைச் சிட்டாய்ப்
பறந்து விட்டான் என்று கூறுகிறோம்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள் :
• மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான
புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
• நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
• தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப்படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள்
வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன .
• சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
• உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.
பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை :
• ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளர்க்கலாம்.
• நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்கலாம்.
• தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத்
தவிர்க்கலாம்.
இந்தியாவின் பறவை மனிதர்:
• இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி.
• பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார் .
• தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
சமைப்பதற்கு தன் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு
மகிழ்வுடன் போட்டுவிட்டு பட்டினியாக இருந்தவர்.
"காக்கை குருவி எங்கள் சாதி" - பாரதியார் .
"மனிதன் இல்லாத உலகில் பறைவகள்
வாழமுடியும்!
பறைவகள் இல்லாத உலகில் மனிதன்
வாழமுடியாது!" - பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி.
• ஆர்டிக் ஆலா : உலகிலேயே நெடுந்தொலைவு 22,000 கி.மீ. பயணம் செய்யும் பறைவயினம்.
• பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.
• உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் – 20.
உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா.
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் சத்திமுத்தப் புலவர்
3. பறவைகள் இடம்பெயர்வதற்கு வலசை போதல்என்று பெயர்.
4. இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம்,
இனப்பெருக்கம்
பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.
1. மரங்களை வளர்த்து இயற்கையைக் காப்போம் செயற்கை உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம்.
(செயற்கை / இயற்கை)
2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் மிகுந்துள்ளதுதற்போது சிட்டுக்குருவிகள்
எண்ணிக்கைகுறைந்துள்ளது(குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)
4. விரிவானம் - கிழவனும் கடலும்
• கிழவனும் கடலும் (The Oldman and the Sea.) என்னும் ஆங்கிலப் புதினம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது .
• இந்நூல் 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது.
• கிழவனும் கடலும் (The Oldman and the sea) என்ற புதின நூலின் ஆசிரியர் - எர்னெஸ்ட் ஹெமிங்வே
• 'கிழவனும் கடலும்' - இக்கதையின் நாயகன் - சாண்டியாகோ
• சாண்டியாகோ என்ற வயது முதிர்ந்த மீனவருக்கு கடந்த 84 நாள்களாக மீன் கிடைக்கவில்லை.
• 'மனோலின்' என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக்கொள்வதற்காக சாண்டியாகோ என்ற முதியவருடன் 40
நாள்கள் கடலுக்கு வந்தான்.
• ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர்.
• 85 வது நாள் மீன் கிடைத்தது.
• கதையின் இறுதியில் கிழவனின் விடாமுயற்சி வென்றது.
5. கற்கண்டு - முதலெழுத்தும் சார்பெழுத்தும்
எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
1.முதல் எழுத்து
2.சார்பு எழுத்து
முதல் எழுத்து :
• உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
• பிற எழுத்துகள் தோன்றுவதற்கும்இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன.
• முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொல் - (எ.கா.) ஆம்.
• முதல் எழுத்துகள் இடம்பெறாத சொல் - (எ.கா.) குருவி.
சார்பு எழுத்துகள் :
• முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள்.
• இவை பத்து வகைப்படும்.
1.உயிர்மெய்
2.ஆய்தம்
3.உயிரளபெடை
4.ஒற்றளபெடை
5.குற்றியலிகரம்
6.குற்றியலுகரம்
7.ஐகாரக்குறுக்கம்
8.ஒளகாரக்குறுக்கம்
9.மகரக்குறுக்கம்
10.ஆய்தக்குறுக்கம்
1.உயிர்மெய் :
• மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
• உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
•வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும்.
• ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
• முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
2.ஆய்தம் :
• மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
• முப்புள்ளி, முப்பாற் புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
• நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
• தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின்
இடையில் மட்டுமே வரும்.
• தனித்து இயங்காது.
• முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும
வாழ்வியல் - திருக்குறள்
• மக்கள் பயனுள்ள முறை யில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள் .
• அறநூல்களில் ‘உலகப் பொது மறை‘ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள்.ஏழு சொற்களில்
மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும்.
கடவுள் வாழ்த்து :
1)அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள் : அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். ஆதி பகவனே உலகுக்குத் தொடக்கம்.
வான் சிறப்பு :
2)விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
பொருள் : மழை உரியகாலத்தில் பெய்யாது போனால் உலகத்து உயிர்களை எல்லாம் பசி
துன்புறுத்தும்.
3)கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.*
பொருள் : உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.
நீத்தார் பெருமை :
4)செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
பொருள் : முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாது என்பவர் சிறியோர்.
மக்கட்பேறு :
5)தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
பொருள் : தம்மை விடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி.
6)ஈனற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.*
பொருள் : தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப்
பெருமகிழ்ச்சி அடைவாள்.
அன்புடைமை :
7)அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.*
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள. அன்பு உடையவர்கள் தம் உடம்பும்
பிறர்க்கே என்பார்கள்.
8) அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள் : அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
இனியவை கூறல் :
9) பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பொருள் : பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணி.
10) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.*
பொருள் : இனிய சொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப்
போன்றது.
நூல் வெளி :
• திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
• எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.
• வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு
உண்டு.
• திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகைளக் கொண்டது.
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்கைளக் கொண்டுள்ளது.
• “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.
• திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.
• நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
1.இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந் தற்று.
2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
நயம் அறிக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை : செயற்கரிய,செய்வார்,செயற்கரிய,செய்கலா
எதுகை : செயற்கரிய,செயற்கரிய
பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.
2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
கடல் - வேறு பெயர்கள் :
நீர், புணரி, நேமி, பரவை, வேலம்,ஆர்கலி,அத்தி, திரை,நரலை, வாரிதி,பெளவம், வேலை, முந்நீர், உவரி, வாரி,கடல்,
சலராசி,தோய நிதி,அம்பரம், உததி,சிந்து, சலதி, வெள்ளம், அளக்கர், சமுத்திரம்,முந்நீர், பகராவாரம்.என கடலுக்கு வேறு
பெயர்களும் உண்டு,
கடலுக்கு மொத்தம் 32 வகை சொற்கள் காணப் படுகின்றன.
தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.
1.பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
2.கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.
விடை: கபிலன் வேலை செய்ததான்.களைப்பாக இருக்கிறார்.
3.இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
விடை: இலக்கியா இனிமையாகப் பாடினால்.பரிசு பெற்றாள்.
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக .
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப்----------- என்று பெயர். (பறவை / பரவை)
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ----------- ஆற்றினார். (உரை / உறை)
3. முத்து தம் ---------------- காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி )
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை ------------ (அலைத்தாள் / அழைத்தாள்
).
பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.
1. ‘புள்’ என்பதன் வேறு பெயர் - பறவை
2. பறவைகள் இடம்பெயர்தல் - வலசை போதல்
3. சரணாலயம் என்பதன் வேறு பெயர் - புகலிடம்
வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
விடை: சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் .
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
விடை: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
விடை: சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
விடை: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.
கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை முப்பது
3. திங்கள் என்பதன் பொருள் நிலவு
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை செங்கால் நாரை
5. பாரதியார் காணி நிலம் வேண்டும் என்று பாடுகிறார்.
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் தனி நிலை
1.கண்டம் - Continent
2.வலசை - Migration
3.புகலிடம் - Sanctuary
4.Climate - தட்பவெப்பநிலை
5.Weather - வானிலை
6.Gravitational Field - புவியிர்ப்புப் புலம்
- 6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் இயல் ஒன்று-தமிழ்த்தேன் TNPSC,CCSE,TNUSRB Notes
- 6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் இயல் இரண்டு - இயற்கை TNPSC,CCSE,TNUSRB Notes
- 6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் இயல் மூன்று - அறிவியல் தொழில்நுட்பம் TNPSC,CCSE,TNUSRB Notes
- 6 ஆம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பருவம் இயல் ஒன்று - கண்ணெனத் தகும் TNPSC,CCSE,TNUSRB Notes
- 10 ஆம் வகுப்பு தமிழ் இயல் ஒன்று - அமுத ஊற்று TNPSC,CCSE,TNUSRB Notes