இயல் மூன்று - அறிவியல் தொழில்நுட்பம்
1. கவிதைப்பேழை - அறிவியல் ஆத்திசூடி
ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்.
ஒளவையின் ஆத்திசூடியை நாம் அறிவோம்.
பாரதியார் புதிய ஆத்திசூடி என்று காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறினார்.
"அறிவியல் சிந்தனை கொள்
ஆய்வில் மூழ்கு
இயன்றவரை புரிந்துகொள்
ஈடுபாட்டுடன் அணுகு
உண்மை கண்டறி
ஊக்கம் வெற்றிதரும்
என்றும் அறிவியலே வெல்லும்
ஏன் என்று கேள்
ஐயம் தெளிந்து சொல்
ஒருமித்துச் செயல்படு
ஓய்வற உழை
ஔடதமாம் அனுபவம்"
- நெல்லை சு.முத்து
சொல்லும் பொருளும்
1)இயன்றவரை - முடிந்தவரை
2)ஒருமித்து - ஒன்றுபட்டு
3)ஔடதம் - மருந்து
நூல் வெளி
தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
விக்ரம் சாராபாய் விண்வெளிமையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
80 கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக.
எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
1)அணுகு - தெளிவு -2
2)ஐயம் - சோர்வு-3
3)ஊக்கம் - பொய்மை -4
4)உண்மை - விலகு -1
2. கவிதைப்பேழை - அறிவியலால் ஆள்வோம்
பாடலின் பொருள் :
மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளேயும் சென்று ஆய்வுகள் செய்கின்றான்.
நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான் .
வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பில் சிறந்துள்ளான்.
இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறான் .
எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனை யும் படைத்து விட்டான் .
இணையவலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.
பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க வழிவகை செய்துவிட்டான் .
அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயலுகிறான் .
நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான் .
அங்கு சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.
- பாடப்பகுதியான இப்பாடல் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்டது.
"வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்." என்ற பாடலை இயற்றியவர் மகாகவி பாரதியார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
3.உரைநடை உலகம் - கணியனின் நண்பன்
காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர்.
இவர் 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.
அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.
ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.
நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை மனிதரை விட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும்.
ஒவ்வொரு தானியங்கியிலும் ஒரு கணினி இணைந்து இருக்கும்.
தானியங்கியின் செயல்களை அந்தக் கணினி கட்டுப்படுத்தும்.
மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும்.“இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்” என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது.
நுண்ணுணர்வுக் கருவிகள் - Sensors
1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரிகேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer)அவருடன் போட்டியிட்டது. போட்டியின் முடிவில் போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.
உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் >‘சோபியா’. மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘ புதுமைகளின் வெற்றியாளர் ’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை .
சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை தானியங்கிகள்
2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு செயற்கை நுண்ணறிவு
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் டீப் புளூ (Deep blue)
4. ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு சவுதி அரேபியா
4.விரிவானம் - ஒளி பிறந்தது (அப்துல் கலாமுடன் நேர்காணல்)
அறிவியல் மீது அப்துல்கலாமுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமான முதல் நிகழ்வு : அறிவியல் ஆசிரியர் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கிக் கூறினார். அன்று முதல், வானில் பறக்க வேண்டும் என்பது என் வாழ்க்கையின் குறிக்கோள் ஆகிவிட்டது. அதுவே என் அறிவியல் ஆர்வத்தின் தொடக்கம்.
அப்துல்கலாமுக்கு மிகவும் பிடித்த புத்தகம் : தமிழில் திருக்குறள், ‘லிலியன் வாட்சன் ’ எழுதிய, 'விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps).
போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக்கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையை’ கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் அப்துல்கலாமுக்கு பெருமகிழ்வை அளித்தது.
சுதந்திர இந்தியாவின் வெற்றிகளாக அப்துல்கலாம் எவற்றைக் கருதுகிறீர்கள்?
• உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்.
• தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம்.
• எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.
• அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம்.
• நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.
• பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ‘அக்னி’ மற்றும் ‘பிரித்வி’ ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
இவற்றையெல்லாம் இந்தியாவின் வெற்றிகளாகக் கருதுகின்றார்.
கடலுக்கு அடியில் மனிதரால் கண்டறியப்படாத ஏராளமான தாவரங்கள், உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து புதிய மூலக்கூறுகளைப் பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவை வெற்றிபெறும் போது ‘எய்ட்ஸ்’ போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் புதிய நோய்களுக்கும்கூடத் தடுப்பு மருந்து கண்டறியப்படலாம்.
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் - அப்துல்கலாம்
மூன்று சிறப்புகளைப் பெற்றிருக்கும் என நம்புகிறேன்.
1. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்க ழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.
2. அனைத்து இயற்கை வளங்க ளும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும் நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.
3. செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.
525 கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது.
5.கற்கண்டு - மொழி முதல், இறுதி எழுத்துகள்
மொழி முதல் எழுத்துகள் :
மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு .
சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.
சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
• உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
• க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
(எ. கா) க - வரிசை எழுத்துகள் : கடல், காக்கை , கிழக்கு, கீற்று, குருவி, கூந்தல், கெண்டை, கேணி, கைகள், கொக்கு, கோலம், கௌதாரி.
• ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
• ங - வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- ஙனம்
* (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் :
• மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது.
• ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
•ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
• ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது.
டமாரம், ரம்பம், லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.
மொழி இறுதி எழுத்துகள் :
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
•உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
• ஞ், ண், ந், ம், ய் ,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ்)
•அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
மொழி இறுதியாகா எழுத்துகள் :
•சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
• ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
• க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
• உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
கார்த்திக், ஹாங்காங், சுஜித், ஜாங்கிரி, திலீப், மியூனிச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.
• எகர வரிசையில் 'கெ' முதல் 'னெ' முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
• ஒகர வரிசையில் 'நொ' தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
(நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் 'துன்பம்' என்னும் பொருளில் வரும்)
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் :
• மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
• உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
•ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
சர். சி. வி. இராமன் :
1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” கண்டுபிடிப்பு.
இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது - இராமன் விளைவு.
“தேசிய அறிவியல் நாள்” - பிப்ரவரி 28 .
1. கம்ப்யூட்டர் - கணினி
2. காலிங்பெல் - அழைப்பு மணி
3. மிஷின் - எந்திரம்
4. ரோபோ - அடிமை
1.அப்துல்கலாமின் சுயசரிதை - அக்னிச் சிறகுகள்
2. அகர வரிசையில் அமையும் இலக்கியம் - ஆத்திசூடி
3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி - எந்திரமனிதன்.
4. எந்திரமனிதனுக்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு - சவுதி அரேபியா
7. ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டம் பெற்ற ரோபோ - சோபியா
8. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல் - ஆய்வு
9. சதுரங்கப் போட்டி யில் டீப்புளூ வெற்றி பெற்றது.
10. மருந்து என்னும் பொருள் தரும் சொல் - ஔடதம்
11. இந்தியா செலுத்திய ஏவுகணை. - அக்னி ,பிரித்வி
12. தானாகச் செயல்படும் எந்திரம். - தானியங்கி
13. அப்துல்கலாம் வகித்த பதவி குடியரசுத் தலைவர்.
கலைச்சொல் அறிவோம்:
1.செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence
2.ஆய்வு - Research
3.மீத்திறன் கணினி - Super Computer
4.கோள் - Planet
5.ஔடதம் - Medicine
6.எந்திர மனிதன் - Robot
7.செயற்கைக் கோள் - Satellite
8.நுண்ணறிவு - Intelligence
பொருத்துக
Emblem | _ | அறிவாளர் |
Thesis | _ | குறியீட்டியல் |
Intellectual | _ | சின்னம் |
Symbolism | _ | ஆய்வேடு |
- 6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் இயல் ஒன்று-தமிழ்த்தேன் TNPSC,CCSE,TNUSRB Notes
- 6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் இயல் இரண்டு - இயற்கை TNPSC,CCSE,TNUSRB Notes
- 6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் இயல் மூன்று - அறிவியல் தொழில்நுட்பம் TNPSC,CCSE,TNUSRB Notes
- 6 ஆம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பருவம் இயல் ஒன்று - கண்ணெனத் தகும் TNPSC,CCSE,TNUSRB Notes
- 10 ஆம் வகுப்பு தமிழ் இயல் ஒன்று - அமுத ஊற்று TNPSC,CCSE,TNUSRB Notes