Easy Tutorial
For Competitive Exams

Science QA 6 ஆம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பருவம் இயல் ஒன்று - கண்ணெனத் தகும் TNPSC,CCSE,TNUSRB Notes

இயல் ஒன்று - கண்ணெனத் தகும்

1.கவிதைப்பேழை - மூதுரை

சொல்லும் பொருளும்

1)மாசற - குறை இல்லாமல்
2)சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து
3)தேசம் - நாடு

நூல் வெளி:

•ஆசிரியர் : ஔவையார.
•பிற நூல்கள் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி
•மூதுரை - மூத்தோர் கூறும் அறிவுரை.
•மூதுரை - 31 பாடல்கள்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

58202.மாணவர்கள் நூல்களை _________ கற்க வேண்டும்.
மேலோட்டமாக
மாசுற
மாசற
மயக்கமுற
58203.இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
இடம் + மெல்லாம்
இடம் + எல்லாம்
இட + எல்லாம்
இட + மெல்லாம்
58204.மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மாச+அற
மாசு+அற
மாச+உற
மாசு+உற
58205.குற்றம்+இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
குற்றமில்லதவர்
குற்றம்இல்லாதவர்
குற்றமல்லதவர்
குற்றம்அல்லாதவர்
58206.சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
சிறப்புஉடையார்
சிறப்புடையார்
சிறப்படையார்
சிறப்பிடையார்

2.கவிதைப்பேழை - துன்பம் வெல்லும் கல்வி

சொல்லும் பொருளும்

1)தூற்றும் படி - இகழும் படி
2)மூத்தோர் - பெரியோர்
3)மேதைகள் - அறிஞர்கள்
4)மாற்றார் - மற்றவர்
5)நெறி - வழி
6)வற்றாமல் - அழியாமல்

நூல் வெளி :

•எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
. •திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக.

58207.மாணவர் பிறர் ______நடக்கக் கூடாது
வபாற்றும்படி
தூற்றும்படி
பார்க்கும்படி
வியக்கும்பட
58208.நாம் _______ சொற்படி நடக்க வவண்டும்.
இளையோர்
ஊரார்
மூத்தோர்
வழிப்போக்கர்
58209.கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
கையில் + பொருள்
கைப் + பொருள்
கை + பொருள்
கைப்பு + பொருள்
58210.மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
மானம்இல்லா
மானமில்லா
மானமல்லா
மானம்மில்லா

3. உரைநடை உலகம் - கல்விக்கண் திறந்தவர்

காமராசரின் திட்டங்கள் :

•ஊர் தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும்.
•நாடு முழுதும் 56 ஆயிரம் பள்ளிகளைத் திறக்க முடிவு.
ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி.
மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி.
ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி.
•மாணவர்களுக்கு ஒரு வேலை உணவு.

கல்விக்கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்.

காமராசரின் சிறப்புப் பெயர்கள் :

•பெருந்தலைவர்
•கறுப்புக் காந்தி
•படிக்காத மேதை
•ஏழைப்பங்காளர்
•கர்ம வீரர்
•தலைவர்களை உருவாக்குபவர்

காமராசரின் கல்வி பணிகள் :

•மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார்.
மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
•குழந்தைகளைப் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச்சீருடை திட்டம்

காமராசருக்குத் தமிழக அரசு செய்த சிறப்புகள் :

•மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது.
•நடுவண் அரசு 1976 ல் பாரதரத்னா விருது வழங்கியது.
•காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் , நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
•சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
•சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
•கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

58211.பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________
ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
வழி தெரியவில்லை
பேருந்து வசதியில்லை
58212.பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
பசி + இன்றி
பசி+யின்றி
பசு +இன்றி
பசு + யின்றி
58213.காடு+ஆறு என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_______
காட்டாறு
காடாறு
காட்டுஆறு
காடுஆறு
58214.படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
படிப்பு + அறிவு
படிப்+அறிவு
படி+அறிவு
படிப்பு+ வறிவு
58215._________ தூரத்தில் ஆரம்பப் பள்ளி, _______ தூரத்தில் நடுநிலைப் பள்ளி, _________ தூரத்தில் உயர்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்று காமராசர் திட்டம் வகுத்தார்.
ஐந்து மைல், ஒரு மைல், மூன்று மைல்
ஒரு மைல், மூன்று மைல், ஐந்து மைல்
மூன்று மைல், ஒரு மைல், ஐந்து மைல்
ஒரு மைல், ஐந்து மைல், மூன்று மைல்

கோடிட்ட இடங்கடள நிரப்புக.

1. குழந்தைகளைப் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் _______ அறிமுகப்படுத்தினார்.
விடை: சீருடைத் திட்டத்தை

2. காமராசரைக் ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனமார பாராட்டியவர்___________
விடை: தந்தை பெரியார்

4.விரிவானம் - நூலகம் நோக்கி...

•ஆசியா கண்டத்திலே மிகப்பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.
•ஆசியாவிலேயே 2 வது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டில் உள்ளது.
•நூலக விதிகளை உருவாக்கியவர் - இரா.அரங்கநாதன்.
•இந்திய நூலக அறிவியலின் தந்தை - இரா.அரங்கநாதன்.

•அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தரை தளத்தில் ,பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு.
•தொட்டு படிப்பதற்கான ப்ரெய்லி நூல்கள் உள்ளன.
ஒலி வடிவ நூலகள் குறுந்தகடுகள் வடிவில் உள்ளன.
ப்ரெய்லி எழுத்தில் நூல்களை உருவாகும் கருவியும் உள்ளது.
•படியெடுக்கும் வசதியும் உண்டு.

escalator - நகரும் படிக்கட்டு

•அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளம்:
• குழந்தைகளுக்கான பகுதி
•செயற்கை மரம் ஒன்றுஉள்ளது.
•20,000 மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் உள்ளன.
•50,000 மேற்பட்ட நூல்கள்.

•அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளம்:
•பழமையான ஓலைச்சுவடிகள்
•வரலாறு,புவியியல்,சுற்றுலா நூல்கள்
•அனைத்துவகை போட்டிதேர்வுக்கான நூல்கள்
•மின் நூல்கள்,மின் இதழ்களும் உள்ளன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டு தளங்கள் :

தரைத்தளம் - சொந்த நூல் படிப்பகம்,ப்ரெய்லி நூல்கள்
முதல் தளம் - குழந்தைகளுக்கான பிரிவு,பருவ இதழ்கள்
இரண்டாம் தளம் - தமிழ் நூல்கள்
மூன்றாம் தளம் - கணினி அறிவியல்,தத்துவம்,அரசியல் நூல்கள்.
நான்காம் தளம் - பொருளியல்,வணிகவியல்,சட்டம், கல்வி.
ஐந்தாம் தளம் - கணிதம்,அறிவியல்,மருத்துவம்
ஆறாம் தளம் - பொறியியல்,வேளாண்மை,மருத்துவம்.
ஏழாம் தளம் - வரலாறு,சுற்றுலா
எட்டாம் தளம் - நூலகத்தின் நிர்வாகப்பிரிவு

நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலர்:

1)அறிஞர் அண்ணா
2)ஜவஹர்லால் நேரு
3)அண்ணல் அம்பேத்கர்
4)காரல்மார்க்ஸ்

•தமிழ்நாடு அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

•சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

5.கற்கண்டு - இன எழுத்துகள்

ஒலிக்கும் முயற்சி , பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள்.
• ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள்.
•சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
•(எ.கா.) திங்கள்,மஞ்சள்,மண்டபம்,சந்தனம்,அம்பு,தென்றல்.
•இடையின எழுத்துகள் ஆறும் (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஒரே இனமாகும்.
•உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும் , நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
•குறில் எழுது அல்லாத ன் இன எழுத்து , ன் இன எழுத்து
•சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை.
அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
(எ.கா.) ஓஒதல்,தூஉம்,தழீஇ
ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக.

58216.மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல் எது?
மஞ்சள்
வந்தான்
கல்வி
தம்பி
58217.தவறான சொல்லை வட்டமிடுக.
கண்டான்
வென்ரான்
நண்டு
வண்டு

பின்வரும் பிழை சொற்களைத் திருத்தி எழுதுக

பிழையான சொல் - திருத்தம்
1)தெண்றல் - தென்றல்
2)கன்டம்-கண்டம்
3)நன்ரி - நன்றி
4)மன்டபம் - மண்டபம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?

(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்வி வளர்ச்சி நாள்)
1. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்.
2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினம்.
3. அப்துல்கலாம் பிறந்த நாள் மாணவர் தினம்.
4. விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினம்.
5.ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினம்.

கலைச்சொல் அறிவோம்:

1)கல்வி - Education
2)தொடக்கப்பள்ளி - Primary School
3)மேல்நிலைப்பள்ளி - Higher Secondary School
4)மின்படிகட்டு - Escalator
5)மின்தூக்கி - Lift
6)மின்னஞ்சல் - E- mail
7)குறுந்தகடு - Compact Disk (CD)
8)மின்நூலகம் - E-Library
9)மின்னூல் - E-Book
10)மின் இதழ்கள் - E- Magazine
11)நூலகம் - Library

Share with Friends