Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-மரபுக்கவிதை சுரதா

சுரதா

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • ஊர் = பழையனூர்
  • பெற்றோர் = திருவேங்கடம், சண்பகம் அம்மையார்

சிறப்பு பெயர்கள்:

  • உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
  • தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
  • கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
  • கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)

படைப்புகள்:

  • தேன்மழை(கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
  • சிரிப்பின் நிழல்(முதல் கவிதை)
  • சாவின் முத்தம்
  • உதட்டில் உதடு
  • பட்டத்தரசி
  • சுவரும் சுண்ணாம்பும்
  • துறைமுகம்
  • வார்த்தை வாசல்
  • எச்சில் இரவு
  • அமுதும் தேனும்
  • தொடா வாலிபம்

கட்டுரை:

  • முன்னும் பின்னும்

இதழ்:

  • காவியம்(முதல் கவிதை இதழ், வார இதழ்)
  • இலக்கியம்(மாத இதழ்)
  • ஊர்வலம்(மாத இதழ்)
  • சுரதா(மாத இதழ்)
  • விண்மீன்(மாத இதழ்)

குறிப்பு:

  • பாரதிதாசனுக்கு தாசனாக விளங்கியதால் சுப்புரத்தினதாசன் என்பதை சுரதா என மாற்றிக்கொண்டார்

சிறப்பு:

  • தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசு பெற்றவர்
  • வ.ரா(வ.ராமசாமி) = மற்றொரு பாரதி பிறந்து விட்டான்

மேற்கோள்:

  • தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்
  • தடைநடையே அவர் எழுத்த்தில் இல்லை வாழைத்
  • தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு
  • படுக்கவைத்த வினாக்குறி போல்
  • மீசை வைத்த பாண்டியர்கள்
  • வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
  • எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி
  • என்பானோ மோனனையைப் போல் முன்னே வந்தான்


Share with Friends