Easy Tutorial
For Competitive Exams

Science QA அடிப்படை உரிமைகள்

53271.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): நமது அரசியலமைப்பு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமய சுதந்திரத்தினை அளிக்கிறது. காரணம்(R): இந்தியா ஒரு சமயசார்பற்ற அரசு ஆகும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53272.கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படை உரிமைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
அடிப்படை உரிமைகளை மீறும்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்றம் ஆகும்.
அடிப்படை உரிமைகள் அனைத்தும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும்
53273.பின்வருவனவற்றுள் எவை சரியானவை அல்ல
சட்டத்தின் முன் சமம் என்பது பிரிட்டனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு எதிர்நிலை கருத்து ஆகும்.
சட்டங்களானது சம பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பது அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட நேர்மறையான கருத்தாகும்.
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
இவற்றுள் ஏதுவுமில்லை
53274.பின்வருவனவற்றுள் எது தவறானது?
1.உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை பிறப்பிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விட பரந்தது.
2.ரானுவ வீரர்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக உச்சஎஈதிமன்றத்தை அணுகலாம்.
3.சரத்து 39- A, 44-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது.
4.அடிப்படை இரிமைகள் பகுதி IV- ல் உள்ளன.
1 மட்டும்
1 மற்றும் 2
3 மற்றும் 4
2,3,4மட்டும்
53275.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்புச் சட்டங்கள் இயற்றவும் சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகை அளித்து சட்டம் இயற்ற வகை செய்யும் சரத்து
சரத்து 14
சரத்து 15
சரத்து 16
சரத்து 17
53276.வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு பற்றி கூறும் சரத்து?
சரத்து-20
சரத்து- 21
சரத்து-22
சரத்து-19
53277.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): உயர்நீதி மன்றத்தின் நீதிப்பேராணை பிறப்பிக்கும் அதிகாரமானது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விட பரந்தது.
காரணம்®: அடிப்படை உரிமை மீறப்பட்டால் உச்ச நீதிமன்றம் ஆணைப் பிற்ப்பிக்கும். ஆனால் அடிப்படை உரிமை மற்றும் சாதாரண உரிமைகள் மீறப்பட்டாலும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53278.சொத்துரிமை எந்த அரசியலமைப்புத் திருத்ததின் மூலம் அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்டது.
42- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1976
44- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1977
44- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1978
54- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1979
53279.உரிமைகள் பாதுகாப்பு சட்டம் எந்த சரத்தின் வெளிப்பாடு?
சரத்து 16
சரத்து 17
சரத்து 18
சரத்து 24
53280.பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
1.அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் – Article 19(1) (b)
2.பணி செய்யும் சுதந்திரம்- Article 19(1)(g)
3.சட்டத்தின் சம பாதுகாப்பு- Article 14
4.குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமைகள் – Article 22
1 மற்றும் 2
2 மற்றும் 3
1,2 மற்றும் 3
1,2,3 மற்றும் 4
53281.சமய சுதந்திர உரிமை
சரத்து 25-29
சரத்து 26-28
சரத்து 25-28
சரத்து 27-28
53282.சமயத்திற்கு வரி விதிப்பதை தடை செய்யும் சரத்து எது?
சரத்து-25
சரத்து 26
சரத்து 27
சரத்து 28
53283.கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படை உரிமைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.குற்றஞ்சாட்டப்பட்ட செயல், செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்
2.ஒரு நபரின் வாழ்க்கையையும், தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது.
3.எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டு தண்டிக்கப்பட கூடாது.
4.குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53284.அடிப்படைஉரிமைகளின் பாதுகாவலன் யார்?
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம்
53285.மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ள எல்லோருக்கும் கல்விக்கூடங்கள் நிர்வகிக்க வகை செய்யும் சரத்து
சரத்து- 28
சரத்து-29
சரத்து-30
சரத்து-32
53286.ஒரு நீதிமன்றமோ, தீர்ப்பாயங்களோ தம் அதிகார வரம்பினை மீறி செயல்பட்டால் பிறப்பிக்கப்படும் நீதிப் பேராணை
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
53287.சுரண்டலுக்கெதிரான உரிமைகளை கொண்ட சரத்துகள்?
சரத்துகள் 14-18
சரத்துகள் 19-22
சரத்துகள் 23-24
சரத்துகள் 25-28
53288.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது.
2.பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் இந்தியாவின் ஒருமைப்பாடு இறையாண்மை மற்றும் பொது அமைதியின் நலனுக்குட்பட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53289.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிற சரத்துகள்
சரத்து 12-34
சரத்து 12-35
சரத்து 12-32
சரத்து 14-35
53290.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.அடிப்படை உரிமைகள் என்பன தனிமனிதனுக்கு மிகவும் அவசியமான உரிமைகள் ஆகும்.
2.அடிப்படை உரிமைகள், உண்மையான மக்களாட்சி நிலவவும், அனைத்துக் குடிமக்கள் சமத்துவம் பெறவும் உதவுகிறது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
Share with Friends