Easy Tutorial
For Competitive Exams

Science QA முறை மன்ற நடுவர்( Ombudsman)

முறைமன்ற நடுவர்

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிசெய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதன் இடைவிளைவான பொருட்பாடுகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கு 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொதுப்பணியாளர்களால் தொடர்புடைய சட்டத்தின் வகை முறைக்கிணங்க நிர்வாக செயல்பணிகளை செய்துமுடிக்கையில் செய்யப்படும் ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் அல்லது முறைகேடுகள் எதன் பேரிலுமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

“பொதுப் பணியாளர்” என்றால் தலைமையர் அல்லது துணைத் தலைமையர், மேயர் அல்லது துணை மேயர் உள்ளடங்களாக உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கும்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முதல் முறைமன்ற நடுவராக திரு.M. மாலிக் பெரோஸ் கான், இ.ஆ.ப.(ஓ)., அவர்கள் 08.01.2021 அன்று பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் சென்னை, கிண்டி, அண்ணாசாலை, 100 இலக்கமிட்ட கட்டிடத்தில் இயங்கிவருகிறது.

Share with Friends