Easy Tutorial
For Competitive Exams

Science QA திருக்குறள் Test 1

53113.அன்பில்லாதார்க்கு உடலுறுப்புகளால் என்ன பயன் என்ற வினா அமைந்த குறள் எது?
கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்
சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு
53114."பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ……………….
………………………………………………… “
மேற்கூறிய திருக்குறளின் படி ஒரு சமுதாயத்தில் தனி மனிதர்களுக்கிடையேயான வேற்றுமைக்குக் காரணமாக இருப்பது :
(i) அவர்களுடைய செயல்களின் தரம்
(ii) அவர்களின் உறவினர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவு
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) மற்றும் (ii)
மேற்காணும் எவையும் அல்ல.
53115.அறத்திற்கே அன்புசார்ப்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை இக்குறளில் மறத்திற்கும் என்னும் சொல்லில் உம் என்ற விகுதி உணர்வது யாது?
அறத்திற்கும் மட்டுமே அன்பு துணை நிற்கும்
அறத்திற்கும் மட்டும் அன்று மறத்திற்கும் அன்பு துணை நிற்கும்
மறத்திற்கு மட்டும் அன்பு துணை நிற்கும்
இவை அனைத்தும்
53116.(i) பொய்மையும் வாய்மை யிடத்த ………………….. “
(ii) புறந்தூய்மை நீராலமையு மகந்தூய்மை .......... “
இவ்விரண்டு குறள்களையும் ஒருசேர மனதில் கொண்டு கீழ்க்கண்ட எந்த விளைவு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதுவீர் ?
பொய்மை
வாய்மை
புறந்தூய்மை
புரைதீர்ந்த நன்மை
53117.அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு இக்குறளில் ஆருயிர் என்னும் தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஆறுதல் உயிர்
அருமையான உயிர்
உயிருக்கு உயிரான
இவை அனைத்தும்
53118.பாலை நிலத்தில் உள்ள வாடிப் போன மரம் போல் என்ற பொருளை உணர்த்தும் தொடர் இடம் பெற்ற திருக்குறளை எழுதுக.
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று
அறத்திற்கே அன்புசார்ப்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை
53119."ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை"
– மேற்காணும் குறளில் இருந்து நீவிர் அறிவது யாது?
வரவைப் பெருக்குவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்.
செலவைக் கவனமாக மேலாண்மை செய்தால் வரவு குறைவானாலும் எவ்விதத் துன்பமுமின்றி வாழ முடியும்.
வரவு எத்தகையதாயினும் செலவின் பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துக.
வரவு, செலவு இரண்டையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
53120.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு இக்குறள் உணர்த்தும் அன்பிலார் செயல் யாது?
பிறர்க்கு எல்லாம் கொடுத்தல்
பிறர் துன்பம் கண்டு கண்ணீர் விடுதல்
எல்லாம் தமக்குரியதாகுதல்
இவை அனைத்தும்
53121.‘ .............. கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
இக்குறளில் திருவள்ளுவர், எதைக் கூறுவது கனியிருக்கும் போது காயைக் கவர்வதற்கு ஒப்பாகும் என்கிறார் ?
உண்மையிருக்கப் பொய்மை கூறல்.
இம்மை இருக்க மறுமை பற்றிக் கூறல்.
இனியவை இருக்க இன்னாதது கூறல்.
அடக்கமுடமைக்குப் பதிலாக அடக்கமின்மை பற்றிப் பேசுவது.
53122.‘....... யிவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு
மேற்காணும் திருக்குறளில் எவை இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்?
அறமும் பொருளும்
நடுவு நிலைமையும் அடக்கமுடைமையும் –
பொருளும் இன்பமும்
எண்ணும் எழுத்தும்
Share with Friends